திங்கள், 22 பிப்ரவரி, 2016

பப்பாளி

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம் தான் பப்பாளி. மேலும் இது அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. ஆனால் சிலருக்கு இப்பழம் பிடிக்காது. அத்தகையவர்கள் இப்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பப்பாளி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், பப்பாளியை அன்றாடம் உணவில் தவறால் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் தினமும் உங்கள் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உங்கள் அழகும் மேம்படும். குறிப்பாக பப்பாளி பல்வேறு மோசமான நோய்களின் தாக்குதல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

இங்கு தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து கொண்டு இனிமேல் இதனை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

உயிரைப் பறிக்கும் புற்றுநோய்களைப் பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இது புற்றுநோய்களை உண்டாக்கும் டாக்ஸின்களை குடலில் இ-ருந்து முற்றிலும் வெளியேற்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். குறிப்பாக மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு இப்பழம் நல்ல நிவாரணத்தை வழங்கும்.

பப்பாளி உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த பழம். இப்பழத்தை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் கொடுப்பதைக் குறைக்க உதவும்.

பப்பாளி ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம், பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம். மேலும் பெரும்பாலான மருத்துவர்களும் இதையே பரிந்துரைக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் காற்று மாசுபாட்டினால், அசுத்த காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அழுக்குகள் அதிகம் படிந்து, பலருக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் தினமும் பப்பாளி ஜூஸை குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள காயங்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தொண்டையில் அடிநாச் சதையால் கஷ்டப்படுபவர்கள், நன்கு பழுக்காமல், ஓரளவு பழுத்த பப்பாளியை அரைத்து ஜூஸ் செய்து தேன் கலந்து குடித்து வர குணமாகும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், பப்பாளி ஜூஸை குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.

பப்பாளி ஜூஸை குடித்து வருவதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

பப்பாளி ஜூஸை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அல்சர், வயிற்று பிரச்சனைகள், முகப்பரு, படர்தாமரை, பைல்ஸ், சரும அரிப்புக்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படும். ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தில் பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து, சரும அழகை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக